ஊர்மிளை
மங்களம் பொங்கும் அலங்கார பூஷிதமாய் முன் நாள் விளங்கிய அயோத்தி
ஊர்மிளையின் முகம் போல் வாடிய ,துயரம் நிறைந்த அமைதியுடன் நின்றது
மாமன் அகம் சென்று,அண்ணன் பட்டாபிஷேக செய்தி,அவசரமாய் பெற்று
நொடி நேரம் நில்லாது விரைந்த,அருந்தவ சீலன் பரதன் என்னும் பண்பினன்,
சாகேத்தின் அவல நிலை கண்டு,உள்ளம் பதறி,என்னவென அறிய மாளிகை
செல்ல,கைகேயி ஆனந்தமாய் அவனுக்கு மணிமுடி என அறிவிக்க பதறி
துடித்த தம்பி அவன் அண்ணன் எங்கே,தந்தை எங்கே,தம்பி எங்கே என வினவ,
நடந்ததை அறிந்த கைகேயி மைந்தன்,சீஎன அவளை உதறி,நீயும் ஓர் தாயோஎன
வசை பாடி,தந்தையை காண விரைந்திட,அதற்க்கு முன்னே,தயரதர் ஆவி
நிம்மதி நாடி வின்னுலகினை நோக்கி பறந்திருக்க,அய்யகோ என அவன் கதற,
மற்றொரு இடியென,ஈமக்கடனை செய்ய அவன் தந்தை அனுமதி மறுத்து,
வேறுலகம் சென்றனர் என அறிந்து பாவியானேன் என பரிதவித்து நிற்க
கணவனை இழந்த ராணியரும்,மன்னனை இழந்த மக்களும் வாட,பாவியேன
பெயர் கொண்டேனே என்று பரதனும்,பத்தியை பிரிந்த துக்கத்தில் ஊர்மிளையும்
நிற்க,அரசாட்சியை மறுத்த தம்பி,அனைவரும் புடை சூழ கங்கையை தாண்டி
பஞ்சவடியில் குடி புகுந்த ராமனை காண பயணம் செல்ல,மற்றொருமுறை
தன மணாளனை கண்ணால்,காணும் பாக்கியமாவது பெறுவேன் என எண்ணமுற்று,
ராமனார் மனம் மாறினால் நன்றே என்ற நப்பாசையும் உற்று,உடன் சென்றால்.
பரதன் பெரும் கூட்டம் கொண்டு வருவதை அறிந்த இளவல் வெகுண்டு எழ
அவன் பாசத்துடன் வருவான் பகைமை கொண்டு அன்று என விளக்கி அண்ணல்
சாந்தப்படுத்த,வேதனை நிறைந்த அத்துணை முகங்களையும் கண்ட ராமர்,
அன்னைகள் அமங்கலமாய் இருப்பதை உணர்ந்து நடந்ததை அறிந்து அரற்ற,
குலகுரு,அனைவரையும் அமைதிபடுத்தி,ஈமக்கடன்களை ராமன் செய்ய,
அண்ணன் அவனது அரியாசனத்தில் அமர வேண்டும் என பரதன் வேண்ட
சொன்ன சொல் மாறும் குலம் அன்று ரகு குலம் என்று அண்ணல் மறுக்க
ஆகின் உம் பாதுகை அரியணை ஏறட்டும் என பரதன் யாசிக்க ஒரு முடிவு
அங்கு வர,பேதை மனம் அறிந்த அன்னை ஜானகி,தங்கையை தன் நாயகனுடன்
சிறிது நேரம் சேர்த்து வைத்து,அவர் தம் தனிமைக்கு அமைவிடம் தர அங்கு
வந்த இளவல்,இடை மெலிந்து,கருத்து,சிறுத்து பிரிவாற்றல் கொடுமையால்
பரிதாபமாய் பாதிப்பு உற்ற அவள் தன் மனையாளோ அன்றி அவள் நிழல் தானோ
என ஐயமுற்று,அவளை ஏறெடுத்து நோக்க,மனப் புயலில் சிக்குண்ட ஊர்மிளை
தன் செம்பவள இதழ் பிரித்து,உன் கடமைக்கு குறுக்கே நான் ஒரு போதும் தடை
சொல்லேன்,உன் பிரிவினையும் தான் சகித்து உமக்காய் வாழ்வேன் என சொல்ல,
தன் உயிரானவள் பட்ட வேதனையினை உணர்ந்த லட்சுமணன் ஓடிசென்று,
அவளை அள்ளி,உச்சிமோந்து,கட்டி அனைத்து,கண்ணே உன்னை ஒரு போதும்
நான் அய்யமுறேன்,உன்னை என்னை போல் அறிவேன்,அதனாலே உன்னை
நீங்கி அண்ணல் உடன் வரவும் துணிவு பெற்றேன்,உன்னை என் மனதுள்ளே
ஒருகணமும் அகலாமல் நினைந்து ,அதனாலே உயிர் வாழ்வேன் உன் அன்பின்
சக்தி என்னை முழுமையாய் திரும்ப உன்னிடம் சேர்க்கும் என உரைக்க
சமயம் செல்கிறது,இந்த நிலையும், மாறும் சமயம் வந்தது தாங்கள் பிரிகின்ற
நேரம் வந்தது என உணர்ந்து,ஆறுதல் உற்று,தேறுதல் உற்று தத் தம் வழி செல்ல,
பிரியமானவன் மனதுக்கு உகந்தவாறு மொழி சொன்ன மங்கை அயர்ந்து நின்றால்.
மங்களம் பொங்கும் அலங்கார பூஷிதமாய் முன் நாள் விளங்கிய அயோத்தி
ஊர்மிளையின் முகம் போல் வாடிய ,துயரம் நிறைந்த அமைதியுடன் நின்றது
மாமன் அகம் சென்று,அண்ணன் பட்டாபிஷேக செய்தி,அவசரமாய் பெற்று
நொடி நேரம் நில்லாது விரைந்த,அருந்தவ சீலன் பரதன் என்னும் பண்பினன்,
சாகேத்தின் அவல நிலை கண்டு,உள்ளம் பதறி,என்னவென அறிய மாளிகை
செல்ல,கைகேயி ஆனந்தமாய் அவனுக்கு மணிமுடி என அறிவிக்க பதறி
துடித்த தம்பி அவன் அண்ணன் எங்கே,தந்தை எங்கே,தம்பி எங்கே என வினவ,
நடந்ததை அறிந்த கைகேயி மைந்தன்,சீஎன அவளை உதறி,நீயும் ஓர் தாயோஎன
வசை பாடி,தந்தையை காண விரைந்திட,அதற்க்கு முன்னே,தயரதர் ஆவி
நிம்மதி நாடி வின்னுலகினை நோக்கி பறந்திருக்க,அய்யகோ என அவன் கதற,
மற்றொரு இடியென,ஈமக்கடனை செய்ய அவன் தந்தை அனுமதி மறுத்து,
வேறுலகம் சென்றனர் என அறிந்து பாவியானேன் என பரிதவித்து நிற்க
கணவனை இழந்த ராணியரும்,மன்னனை இழந்த மக்களும் வாட,பாவியேன
பெயர் கொண்டேனே என்று பரதனும்,பத்தியை பிரிந்த துக்கத்தில் ஊர்மிளையும்
நிற்க,அரசாட்சியை மறுத்த தம்பி,அனைவரும் புடை சூழ கங்கையை தாண்டி
பஞ்சவடியில் குடி புகுந்த ராமனை காண பயணம் செல்ல,மற்றொருமுறை
தன மணாளனை கண்ணால்,காணும் பாக்கியமாவது பெறுவேன் என எண்ணமுற்று,
ராமனார் மனம் மாறினால் நன்றே என்ற நப்பாசையும் உற்று,உடன் சென்றால்.
பரதன் பெரும் கூட்டம் கொண்டு வருவதை அறிந்த இளவல் வெகுண்டு எழ
அவன் பாசத்துடன் வருவான் பகைமை கொண்டு அன்று என விளக்கி அண்ணல்
சாந்தப்படுத்த,வேதனை நிறைந்த அத்துணை முகங்களையும் கண்ட ராமர்,
அன்னைகள் அமங்கலமாய் இருப்பதை உணர்ந்து நடந்ததை அறிந்து அரற்ற,
குலகுரு,அனைவரையும் அமைதிபடுத்தி,ஈமக்கடன்களை ராமன் செய்ய,
அண்ணன் அவனது அரியாசனத்தில் அமர வேண்டும் என பரதன் வேண்ட
சொன்ன சொல் மாறும் குலம் அன்று ரகு குலம் என்று அண்ணல் மறுக்க
ஆகின் உம் பாதுகை அரியணை ஏறட்டும் என பரதன் யாசிக்க ஒரு முடிவு
அங்கு வர,பேதை மனம் அறிந்த அன்னை ஜானகி,தங்கையை தன் நாயகனுடன்
சிறிது நேரம் சேர்த்து வைத்து,அவர் தம் தனிமைக்கு அமைவிடம் தர அங்கு
வந்த இளவல்,இடை மெலிந்து,கருத்து,சிறுத்து பிரிவாற்றல் கொடுமையால்
பரிதாபமாய் பாதிப்பு உற்ற அவள் தன் மனையாளோ அன்றி அவள் நிழல் தானோ
என ஐயமுற்று,அவளை ஏறெடுத்து நோக்க,மனப் புயலில் சிக்குண்ட ஊர்மிளை
தன் செம்பவள இதழ் பிரித்து,உன் கடமைக்கு குறுக்கே நான் ஒரு போதும் தடை
சொல்லேன்,உன் பிரிவினையும் தான் சகித்து உமக்காய் வாழ்வேன் என சொல்ல,
தன் உயிரானவள் பட்ட வேதனையினை உணர்ந்த லட்சுமணன் ஓடிசென்று,
அவளை அள்ளி,உச்சிமோந்து,கட்டி அனைத்து,கண்ணே உன்னை ஒரு போதும்
நான் அய்யமுறேன்,உன்னை என்னை போல் அறிவேன்,அதனாலே உன்னை
நீங்கி அண்ணல் உடன் வரவும் துணிவு பெற்றேன்,உன்னை என் மனதுள்ளே
ஒருகணமும் அகலாமல் நினைந்து ,அதனாலே உயிர் வாழ்வேன் உன் அன்பின்
சக்தி என்னை முழுமையாய் திரும்ப உன்னிடம் சேர்க்கும் என உரைக்க
சமயம் செல்கிறது,இந்த நிலையும், மாறும் சமயம் வந்தது தாங்கள் பிரிகின்ற
நேரம் வந்தது என உணர்ந்து,ஆறுதல் உற்று,தேறுதல் உற்று தத் தம் வழி செல்ல,
பிரியமானவன் மனதுக்கு உகந்தவாறு மொழி சொன்ன மங்கை அயர்ந்து நின்றால்.

