ஊர்மிளை .
ரகுகுலத்தில் ஓர் இளவரசி,
குலமகளாய் தன் வாழ்வினை வாழ
இக்ஷவாகு வம்சம் வந்த எழிலரசி.
இக்ஷவாகு வம்சம் வந்த எழிலரசி.
ஜனகனின் மகளாய் அவதரித்தாள்,
ஜானகியின் தங்கையாய் வடிவெடுத்தாள்.
ராமனின் காவியத்தில் இவளொரு பாவை,
ஜானகியின் தங்கையாய் வடிவெடுத்தாள்.
ராமனின் காவியத்தில் இவளொரு பாவை,
யாரொருவர் பார்வையும் படாத பதுமை
அண்ணல் ராமன் சீதையை கைபிடிக்க
தம்பி இலக்குவன் மணமுடித்தான் ஊர்மிளையை
அழகினில் அவள் ஓர் ஆரணங்கு
இளவலின் இயல்பறிந்த சீரணங்கு
நடை பயிலும் அன்னம்,
தம்பி இலக்குவன் மணமுடித்தான் ஊர்மிளையை
அழகினில் அவள் ஓர் ஆரணங்கு
இளவலின் இயல்பறிந்த சீரணங்கு
நடை பயிலும் அன்னம்,
இடை மெலிந்த தேவதை.
துடுக்கும்,துள்ளலும் கொண்டு
துள்ளித் திரியும் தும்பி
தூரிகையால் சிந்தையில் நின்றதை
சித்திரமாய் வரைந்திடும் சித்தினி,
ராமனுக்கு பட்டம் கட்ட நாள் குறித்தனர்.
ராமனுக்கு பட்டம் கட்ட நாள் குறித்தனர்.
வண்ண பட்டு சீலைதனில்,வண்ணம் குழைத்து
வடிவாய்
ராமனும்,சீதையும் பட்டத்தில் எழிலோடு அமர்ந்திருக்க
ராமனும்,சீதையும் பட்டத்தில் எழிலோடு அமர்ந்திருக்க
அருகேஅவள்மன்னவன் இலக்குவன் நின்றிருக்க
பரத சத்ருக்கனன் அருகே நின்றிருக்க
தசரதரும் ராணியரும் மகிழ்ந்திருக்க
தசரதரும் ராணியரும் மகிழ்ந்திருக்க
இந்த மங்கை நல்லாள்
தன் மணாளனை நோக்கியபடி
மாடத்தில் அமர்ந்திருந்தாள்..
மாடத்தில் அமர்ந்திருந்தாள்..
ரகுகுல குருவாம் வசிட்ட மகரிஷி
தன் கைகளினால் ரகு குல மனிமுடிதனை
தன் கைகளினால் ரகு குல மனிமுடிதனை
ராமனினின்,சிரத்தினில் சூட்ட
அன்னையர் அகம் மகிழ,அரங்கம் அதிர
விண்ணவர் வாழ்த்து வான் வரை முழங்க

No comments:
Post a Comment