Wednesday, 29 April 2015

தமிழ் தாலாட்டுப் பாடல்கள்.

தமிழ் தாலாட்டுப் பாடல்கள்.


தாலாட்டுப் பாடல்கள்,நம்முடன் இணைந்தவை,
பாடவே தெரியாத பெண்ணாக இருந்தாலும் தன பிள்ளைக்கு நாலு வார்த்தை பாடுவாள்,
இங்கு அது போல் உள்ள பாடல்கள் சில....இது ஒரு தொகுப்பு. என் வரிகள் அல்ல.

ஆராரோ அரிரரோ-பாடல் 1 

ஆராரோ ஆரிரரோ ....ஆராரோ ஆரிரரோ..
ஆராரோ ஆரிரரோ ....ஆராரோ ஆரிரரோ..

கண்ணே நீ உறங்கு கண்மணியே நீ உறங்கு 
பொன்னே நீ உறங்கு,பூ மரத்து வண்டுறங்கு.

ஆரடித்தார் நீ அழுதாய் அடித்தாரை சொல்லி அழு 
அடித்தாரை சொல்லி அழு , ஆக்கினைகள் செய்து வைப்போம்.

அத்தை அடித்தாரோ அள்ளி பூ செண்டாலே 
மாமன் அடித்தாரோ மல்லிகை பூ செண்டாலே 

மாமி அடித்தாரோ மருந்தூட்டும் கையாலே 
பாட்டி அடித்தாரோ பாலூட்டும் சங்காலே 

அவரமணி துவரமணி அரண்மனைக்கு ஏத்த  மணி 
துவமணி வேணுமுன்னு துறையே உன்னை பெற்றெடுத்தேன்.

அடித்தரை சொல்லி அழு ஆக்கினைகள் செய்து வைப்போம்.
வைதாரை சொல்லி அழு வக்கினைகள் செய்து வைப்போம்.

வெண்ணெயால் விளங்கு செய்து வெய்யிலிலே போட்டு வைப்போம் 
மண்ணால் விளங்கு செய்து தண்ணீரில் போட்டு வைப்போம்.

******************************************************************************************************************
ஆராரோ அரிரரோ-பாடல் 2
ஆராரோ அரிரரோ 
அரிரரோ அராரோ 

அரடிச்சு நீயழுதாய் 
கண்மணியே கண்ணுறங்கு 

கண்ணே யடிச்சரார் 
கற்பகத்தைத் தொட்டாரார் 
தொட்டாரைச் சொல்லியழு 
தோள் விலங்கு போட்டு வைப்போம் 
அடிச்சாரைச் சொல்லியழு 
ஆக்கினைகள் செய்து வைப்போம் 

மாமன் அடித்தானோ 
மல்லி பூ சென்டாலே 
அண்ணன் அடித்தானோ 
ஆவாரங் கொம்பாலே 
பாட்டி அடித்தாளோ 
பால் வடியும் கம்பாலே 

ஆராரோ அரிரரோ 
அரிரரோ அராரோ 

அரடிச்சு நீயழுதாய் 
கண்மணியே கண்ணுறங்கு!!!!!


**************************************
****************************************************************************
ஆராரோ அரிரரோ-பாடல் 3
ஆராரோ ஆரிரரோ
ஆறு ரண்டும் காவேரி,
காவேரி கரையிலயும்
காசி பதம் பெற்றவனே!
கண்ணே நீ கண்ணுறங்கு!
கண்மணியே நீ உறங்கு!
பச்சை இலுப்பை வெட்டி,
பவளக்கால் தொட்டிலிட்டு,
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீ உறங்கு!
நானாட்ட நீ தூங்கு!
நாகமரம் தேரோட!
தேரு திரும்பி வர!
தேவ ரெல்லாம் கை யெடுக்க!
வண்டி திரும்பி வர!
வந்த பொண்கள் பந்தாட!
வாழப் பழ மேனி!
வைகாசி மாங்கனியே!
கொய்யாப் பழ மேனி! - நான் பெத்த
கொஞ்சி வரும் ரஞ்சிதமே!
வாசலிலே வன்னிமரம்!
வம்மிசமாம் செட்டி கொலம்!
செட்டி கொலம் பெத்தெடுத்த!
சீராளா நீ தூங்கு!
சித்திரப் பூ தொட்டிலிலே!
சீராளா நீ தூங்கு!
கொறத்தி கொறமாட!
கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல!
வேதஞ் சொல்லி வெளியே வர!
வெயிலேறி போகுதையா!
மாசி பொறக்கு மடா!
மாமன் குடி யீடேற!
தையி பொறக்குமடா - உங்க
தகப்பன் குடி யீடேற!
ஆராரோ ஆரிரரோ
கண்ணே நீ கண்ணுறங்கு!

******************************************************************************************************************
குட்டி குட்டி தாலாட்டுப் பாடல்கள் 

பாடல் 4
பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு
கட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீ
சித்திரப் பூந்தொட்டிலிலே
சிரியம்மா சிரிச்சிடு-கண்ணே நீ
சித்திரப் பூந் தொட்டிலிலே !!!!!


******************************************************************************************************************பாடல் 5
உசந்த தலைப்பாவோ
‘உல்லாச வல்லவாட்டு’
நிறைந்த தலை வாசலிலே
வந்து நிற்பான் உன் மாமன்
தொட்டிலிட்ட நல்லம்மாள்
பட்டினியாப் போராண்டா
பட்டினியாய் போற மாமன்-உனக்கு
பரியம் கொண்டு வருவானோ?



******************************************************************************************************************பாடல் 6
பால் குடிக்கக் கிண்ணி,
பழந்திங்கச் சேணாடு
நெய் குடிக்கக் கிண்ணி,
முகம் பார்க்கக் கண்ணாடி
கொண்டைக்குக் குப்பி
கொண்டு வந்தான் தாய்மாமன்.

******************************************************************************************************************
பாடல் 7
ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்
சேனைக் கெல்லாம் அதிகாரியாம்
சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு
பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்
பல வர்ணச் சட்டைகளும்
பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு
கட்டிக் கிடக் கொடுத்தானோ!
பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு
மின்னோலைப் புஸ்தகமும்
கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணே
கவிகளையும் கொடுத்தானோ !

******************************************************************************************************************
பாடல் 8
ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே
அம்புட்டுதாம் அப்பனுக்கு
வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி
விதம்விதமா அம்புட்டிச்சாம்,
அரண்மனைக்கு ஆயிரமாம்
ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி
அப்பன் விற்று வீடுவர
அண்டை வீடும், அடுத்த வீடும்-கண்ணாட்டி
ஆச்சரியப் பட்டார்களாம்,
பிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான்
பிரியமாக ஆறெடுத்தேன்
அயலூரு சந்தையிலே-கண்ணே நான்
ஆறு மீனை விற்றுப் போட்டேன்.
அரைச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை
அரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன்.
அரை மூடியை அரைக்குப் போட்டு கண்ணே நான்
அழகு பார்த்தேன், ஆலத்தியிட்டு
அத்தை மாரும் அண்ணி மாரும்-கண்ணே உன்
அழகைப் பார்த்து அரண்டார்களே.
அத்திமரம் குத்தகையாம்
ஐந்துலட்சம் சம்பளமாம்
சாமத்தலை முழுக்காம்-உங்கப்பாவுக்குச்
சர்க்கார் உத்தியோகமாம்.
******************************************************************************************************************
பாடல் 9
சீராடும் எந்தன் செல்வமே 
வண்ண சிங்கார கண் உறங்கு
பார் ஆள வந்த யோகா 
செல்ல பார்த்திபா கண் உறங்கு
காண்ணே நீ கண் உறங்கு
கமல காண்ணே நீ கண் உறங்கு
பொன்னே நீ கண்ணுறங்கு 
வண்ண பூவே நீ கண்ணுறங்கு
******************************************************************************************************************
மார்கழி மாசத்திலேதான்-பாடல்-10
மார்கழி மாசத்திலேதான் - கண்ணே நீ
மாராசாவைப் பார்க்கையிலே
தைப் பொங்கல் காலத்திலே - கண்ணே நீ 
தயிரும், சோறும் திங்கையிலே
மாசி மாசக் கடைசியிலே - கண்ணே நீ 
மாமன் வீடு போகையிலே
பங்குனி மாசத்திலே - கண்ணே நீ 
பங்குச் சொத்தை வாங்கையிலே
சித்திரை மாசத் துவக்கத்திலே - கண்ணே நீ 
சீர் வரிசை வாங்கையிலே, 
வைகாசி மாசத்திலே - கண்ணே நீ 
வயலைச் சுற்றிப் பார்க்கையிலே
ஆனி மாசக் கடைசியிலே - கண்ணே நீ
அடியெடுத்து வைக்கையிலே
அகஸ்மாத்தா ஆவணியில் - கண்ணே நீ 
அரண்மனைக்குப் போகையிலே
ஐப்பசி மாசமெல்லாம் கண்ணே - நீ
அப்பன் வீடு தங்கையிலே
கார்த்திகை மாசத்திலும் - கண்ணே 
கடவுளுக்குக் கையெடடி.
******************************************************************************************************************
பாடல் -11
ஓடும் மான் கண்ணோ என் கண்ணே நீ கவரிமான் பெற்ற கண்ணோ
புள்ளி மான் கண்ணோ என் கண்ணே நீ புத்திமான் பெற்ற கண்ணோ
முத்தோ ரத்தினமோ என் கண்ணே நீ தூத்துக்குடி முத்தினமோ...
முல்லை மலரோ என் கண்ணே நீ அரும்புவிரியா தேன்மலரோ..
கண்ணே கண்ணுறங்கு கனியமுதே நீ உறங்கு.
******************************************************************************************************************

ராமனுக்காய் குலசேகர ஆழ்வார் பாடிய தாலாட்டு பாடல்-12
நாலாயிர திவா பிரபந்தத்திலிருந்து 

மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே 
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர் 
கண்ணினன்மா மதில்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே 
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ 

புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே 
திண்டிரலால் தாடகைதன் உரமுருவ சிலைவளைத்தாய் 
கண்டவர் தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே 
எண்டிசையு மாலுடயாய் இராகவனே தாலேலோ 

கொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய் 
தங்குபெரும் புகழ் ஜனகன் திருமருகா தாசரதீ 
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே 
எங்கள்குல தின்னமுதே இராகவனே தாலேலோ 

தாமரைமேல் அயனவனைப் படைத்தவனே - தசரதன்றன்
மாமதலாய் மைதிலிதன் மணவாளா - வண்டினங்கள் 
காமரங்கல் இசைபாடும் கணபுரத்தென் கருமணியே 
ஏமருவும் சிலைவலவா இராகவனே தாலேலோ 

பாராளும் படர்செல்வம் பரதனம்பிக் கேயருளி 
ஆராவன் பிளையவனோ தருஞான மடைந்தவனே 
சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தஅரசே 
தாராலும் நீன்முடிஎன் தாசரதீ thaalEl 

சுற்றமெல்லாம் பின்ன்தொடராத் தொல்கான மடைந்தவனே 
அற்றவர்கட் கருமருந்தே அயோத்தினகர்க் கதிபதியே 
கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே 
சிற்றவைதன் சொல்கொண்ட ஸ்ரீராமா தாலேலோ

ஆளிநிலைப் பாலகனா யன்ருலக முன்டவனே 
வாளியைகொன் ரரசிலைய வானரத்துக் களித்தவனே 
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே 
ஆளினகர்க் கதிபதியே அயோத்திமனே தாலேலோ 

மலையதனா லனைகட்டி மதிளிலங்கை யழித்தவனே 
அலைகடலைக் கடைந்தமரார்க் கமுதருளிச் செய்தவனே
கலைவளவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே 
சிலைவலவா சேவகனே ஸ்ரீராமா தாலேலோ

தளையவிழும் நறுங்குன்சித் தயரதன்றன் குலமதலாய் 
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே 
களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே 
இளையவர்கட் கருளுடையாய் இராகவனே தாலேலோ

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே 
யாவரும்வன் தடிவனங்க அரங்கநகர்த் துயின்றவனே 
காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே 
எவரிவேனி சிலைவலவா இராகவனே தாலேலோ 

கன்னிநன்மா மதில்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன் 
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை 
கொள்னவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரன்சொன்ன 
பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே

No comments:

Post a Comment