Thursday, 30 April 2015

ஊர்மிளை-4

ஊர்மிளை

கைபிடித்த மங்கை ஒருபுறம் நிழல் உருவமாய் இளவல் ஒருபுறம் என 

ராமன் கானகம் புக அடியெடுத்து வைக்கையில் அயோத்தி நகரம் முழுதும் 
அரண்டு,புரண்டு அழுது  கண்ணீர் சிந்தியதை அகிலமே அறியும்.ஆனால் 

மங்கை ஒருத்தி மணாளனை பிரிந்து அதிர்ச்சி மாறாமல் அதிர்ந்த கதை 
அறியுமோ இவ்வுலகம்.ஆனந்தமாய் ஆதிசேசன் அவதாரத்தை நிறைக்க 
தாரமாய் வந்த தாரகை அவள் கண்ணீர் விடவும் மறந்த பிரிவாற்றாமை இது. 

கட்டியவன் கானகம் புறப்பட்ட தருணம் அது,ரணமாய் அவள் நெஞ்சில் பதிந்தது.
ராமனுடன்,தன மகனும் புறப்படட்டும் என சுமித்திரை சொல்ல அகம் மகிழ்ந்த 
லட்சுமணன்,தன மனையாளை உடன் அழைத்து செல்ல பிரியப்பட்டான் மனதில்,

ஆனால் அண்ணன் தன்னை உடன் வர இசைந்ததே,அரியது உர்மிளையும் என்றால் 
அவளையும் ஏன் வருத்துவது என எண்ணமுற்று,தன்னையும் தடை செய்வாரென 
பயந்து,தன் உயிரின் பாதியை அயோத்தியில் நிறுத்தி கடமை செய்ய துணிந்தான் 

மனம் ஆன நாள் கொண்டு ஒரு பொழுதும் பிரியாது இணைந்திருக்க இச்சை கொண்ட
இந்த செம்பவள மேனியால் இளையவன் மனையாள்  ஆனால் இன்று சிலையாய் 
உயிராய் மாறியவனை ஈரேழு ஆண்டுகள் கண்ணாலும் காணா நிலை வந்தது இன்று.


சிரவணன் பெற்றோர் இட்ட சாபம் மகனின் பிரிவால் உன் மரணம் என்று தயரதனுக்கு
இக்கொடிய சாபம் அது இன்று  இளங்கொடி மேனியாளை பற்றியதே என்ன  நியாயம்,
கைகேயி அவள் சுயநலமாய் பெற்ற வரம் 
ஊர்மிளைக்கு உற்றதே பெரும் சாபமாய் 


தமக்கை சீதை செய்த தவம் கணவனுடன் கானகம் சென்று விட்டால் அந்த பாக்கியமும் 
பெறவில்லை இந்த அபாக்கியவதியாய் ஆன ஊர்மிளை,என ஏங்கி தன்னை நொந்தணல்
தன் இயலாமை காரணமாய் அதையும் ஏற்றால் வேறு செய்யும் வகை ஏதும் இன்றியே. 

அன்னை நீ,தந்தை நீ,சொந்தம் நீ,பந்தம் நீ , உற்றானும் நீ,என சரண் புகுந்த உற்றவளை 
மறந்து தமையன் பின்னே சென்றான் இலக்குவன்.அவனே எல்லாம் என வந்த மாது செய்யும் செயல் இது என அறியாமல் பிரமை பிடித்து பேசும் மொழி அற்று நின்றால்.

தன்னில் பாதியாய் ஏற்ற பதியவன் விட்டு விலகும் போது,பேசும் மொழி மறந்து 

செயல் மறந்து கண்ணீர் உகுக்கவும் பயந்து,அவன் கடமை பாதையைஅடைக்காது
தனக்குள்ளே நொந்து சாந்தமாய் நின்றவள் மனதின் வேகம் தாங்காது வீழ்ந்தால் 

அவன் அகன்ற நேரம் மூர்ச்சையுற்று வீழ்ந்தால் நிலத்திலே சித்திரமாய் சித்தினி.
மாமியரும் சகியினரும் பதட்டமுற்று வைத்தியம் செய்து ஆறுதல் மொழியாய் 

அவன் விரைவில் வீடு திரும்ப வேண்டிய முயற்சிகள் எடுப்போம்  என இயம்ப

தமையனின்றி இந்த மனை அடியெடுத்து வைக்கான் தன் மணாளன் சொன்ன சொல் பிறழ்ந்து ஒருபோதும் திரும்பான் தன் தமக்கை மணாளன் என என்னமுற்றவள் 
சொல்பவர்கள் தன்னை தேற்றும் சமாதான மொழி தான் இது என அறியாதாவளோ 


தன் இதழை பிரித்து மென்னகை செய்தால்,அது அவளின் மனதினை பிரதிபலித்து வந்தது விரக்தி புன்னகையாய் மணாளன் இல்ல ஒருபொழுதே ஒரு யுகமாய் ஆகும் 
எனில்  ஈரேழு ஆண்டு கொடும் யுகமாய் செல்லும் தவ வாழ்க்கை வாழ தயாரானாள் 



No comments:

Post a Comment