Thursday, 30 April 2015

ஊர்மிளை-3

ஊர்மிளை தன் மனம் கவர்ந்தவனின் கந்தர்வ தோற்றத்தை கண்டு பெருமையுடன் 
வைத்த விழி வைத்தபடி பார்த்து நிற்க,சமயம் இதுவன்று நாம் காத்திருக்க காத்திரு 
கண்மணியே காற்றாய் என் கடமை முடித்து உன் முன்னே வந்திடுவேன் என்றான்.

அண்ணலும் அவன் இளவலும் தயரதரை  பேட்டி  காண கைகேயி மாளிகை செல்ல
அவர் பத்தினிகள் இருவரும் தம் மாமியருடன் கூடி இன்பமாய் பேசி மகிந்திருக்க 
அடுத்த நாள் விடியலை ஆவலுடன் ஆனந்தமாய் எதிகொள்ள தயாரானது ரகுகுலம் 

தயரதரின் தர்ம பத்தினி கோசலை தன்  மருமகளாம் சீதைக்கு அறிவுரைகள் வழங்கினார் 
மகுடம் சூடும் மகாராணியின் குணநலன் யாது ,தர்மம் யாது என்று எடுத்துரைத்தால் 
பாராளும் பரந்தாமன் தன மனையாள் சீதையை சிரத்தையுடன் அதை செவியுற்றால்.

தயரதர் பெற்ற மக்கள் இருவரும் வந்தடைந்தனர் கொடும்சொல் செவிமடுக்க 

அரண்மனையில் தயரதர் பரிதவித்து அமர்திருந்த நிலையை கண்ட ராமன் 
தாமரை மலர்  ஒத்தமலர்ந்த  தந்தையின்  முகம்,முள் ஒன்று தைத்தார் போல் 
உள்ள நிலை என்ன வினவ அந்த முள்ளாய் உற்றவள் நானே என கைகேயிஉரைக்க 

அப்படியெனின்,பரசுவாய் தாம் மாற தயார் என லட்சுமணன் வேகமாய் சொல்ல,

ஆசையாய் தயரதரும் நோக்க அதன் பின்னே தேவாசுர போரில் உதவியதின் பேரில் 
நான் பெற்ற வரத்தினை இன்று நான் கைவரப் பெற்றேன் உன் தந்தையிடம் அதன் படி  

பரதன் நாடாளவும்,நீ சென்று ஈரேழு வருடங்கள் காடாளவும் வேண்டும் என  

கைகேயி உரைக்க அப்படியே அன்னையே! என ராமர் ஏற்க வெகுண்டான் இளவல்.
மாற்றான் தாயை,வாயில் வந்தபடி வசை பாட,அதனால் தந்தை சற்றே தேற!


நான் தக்க முறையில் உனக்கு நியாயம் செய்தேனில்லை புண்ணியனே நீ ஏன் 

எனக்கு மகனாய் வந்தவதரித்தாய் என தயரதர் பதறி  கேவஅவரையும் தேற்றி
இளவலை அமைதிபடுத்தி கோசலை மாளிகை வந்தடைந்தனர் இருவரும்.

வந்த மக்களில் மூத்தவன் முகத்தில்  அமைதியும் இளையவனிடம் சோகமும் 

ஒரு சேர கண்ட மங்கையர் யாவரும் கவலையுடன் அவர்கள்  முகம் நோக்க 
நடந்த விவரம் சொல்ல இது  உண்மையாயின் நான் கைகேயியிடம் யாசகமாய் 

ராமனை கேட்பேன் என கோசலை எழ,அதிகாரமாய் சொல் தமக்கை என சுமித்திரை 
அவளை வழி நடத்த,விதம் விதமாய் கைகேயியை அனைவரும் வசை பாட 

தக்கபடி உற்றவரை சமாதானம் செய்து தகப்பன் சொல்லே தாரக  மந்திரம் என 

கானகம் நோக்கி காடுமேடே இனி தம் வீடு என கடும் பயணம்  புறப்பட ஆயத்தம் ஆனார்.
ராமன் இருக்குமிடம் தனக்கு அயோத்தி என சீதை உடன் செல்ல வாதம் செய்தாள் 
ராமனுக்கு துணையாய்  இலக்குவன் உடன் செல்வான் என சுமித்திரை அறிவித்தாள் 

அகம் மகிழ்ந்தான் இலக்குவன் தனையனை பின் தொடர்வேன்  எந்த இக்கட்டும் 

எனை உற்ற பின்னரே எம் தமையனை அணுகும் என நல் சேவகனாய் சபதமேற்று   
 மணிமுடி தவிர்த்து மறஉரி தரித்து மூவரும் புறப்பட்டனர் கானகம் நோக்கி.

அங்கிருந்தவர் மனம் எல்லாம் ஆழ்ந்த துயரமதை  அனுபவிக்க அவரினும் மேலாக 

அங்கே ஒரு நங்கையின் இதயம் அது சூரானது சுக்கு நூறானது பிரிவு துயரம் எனும் 
கொடுமைக்கும் மேலான சோகமும் துயரமும் அவள் மனதை ஆட்கொண்டது 

No comments:

Post a Comment