ஹைக்கூ-2
23.பூச்சியை சிறைப் பிடித்து
கூட்டில் விளக்கேற்றியது
தூக்கணாங்குருவி
**************************************
24.ஒற்றைக் குயில் ஓசை
காத்திருக்கும் செவி
துணை ஓசைக்கு
**************************************
25.காட்சிக்கு கிடைக்குமோ
தூரிகையில் சிக்குமோ
மாயமான வானவில்
**************************************
26.இயற்கையை இறைஞ்சுவோம்
மனதில் காட்சி கொடு
கவிதை வேண்டும்
**************************************
27.கரடு முரடாய் உரைந்தது கல்
சிக்கி முக்கியவன் வெளியே
தீப் பொறியாய்
**************************************
28.இரவு பகலாய் உருளும் பந்து
இயக்கத்தை துள்ளியமாய் இயம்பும்
இரு முள்ளு
*************************************
29.அன்னை இல்லம் திரும்பி வரும்
ஆரவார புது மனப்பெண்
ஆடிக் காத்து
**************************************
30.குறையாகவே குடம்
பிச்சை இடும்
நிறையட்டும்
**************************************
31.நான் இருந்தேன் அவன் இல்லை
நான் இல்லை இப்போது
அவன் உண்டு
**************************************
32.விண்மீன் உண்டு பெருத்து
உதயமான ஒளிப் பிழம்பு
ஆதவனோ !
************************************
33.அம்புலி வேண்டுகோள் விடுக்க
ஆதவன் மறைந்த பொழுது
சந்தியானது
**************************************
34.இருள் பறித்தப் பார்வை
திருப்பித் தந்தது
தீபஒளி
**************************************
35.உடைந்த சிற்பம்
உதிர்க்கும் சொற்கள்
வரலாறு
**************************************
36.உரக்கச் சொன்னச் சொல்
கரைந்து போனது
வாகன இரைச்சலில்
**************************************
37.சூரியன் மேற்பார்வையில்
வருணன் தரை இறங்கினான்
வெயில்மழை
23.பூச்சியை சிறைப் பிடித்து
கூட்டில் விளக்கேற்றியது
தூக்கணாங்குருவி
**************************************
24.ஒற்றைக் குயில் ஓசை
காத்திருக்கும் செவி
துணை ஓசைக்கு
**************************************
25.காட்சிக்கு கிடைக்குமோ
தூரிகையில் சிக்குமோ
மாயமான வானவில்
**************************************
26.இயற்கையை இறைஞ்சுவோம்
மனதில் காட்சி கொடு
கவிதை வேண்டும்
**************************************
27.கரடு முரடாய் உரைந்தது கல்
சிக்கி முக்கியவன் வெளியே
தீப் பொறியாய்
**************************************
28.இரவு பகலாய் உருளும் பந்து
இயக்கத்தை துள்ளியமாய் இயம்பும்
இரு முள்ளு
*************************************
29.அன்னை இல்லம் திரும்பி வரும்
ஆரவார புது மனப்பெண்
ஆடிக் காத்து
**************************************
30.குறையாகவே குடம்
பிச்சை இடும்
நிறையட்டும்
**************************************
31.நான் இருந்தேன் அவன் இல்லை
நான் இல்லை இப்போது
அவன் உண்டு
**************************************
32.விண்மீன் உண்டு பெருத்து
உதயமான ஒளிப் பிழம்பு
ஆதவனோ !
************************************
33.அம்புலி வேண்டுகோள் விடுக்க
ஆதவன் மறைந்த பொழுது
சந்தியானது
**************************************
34.இருள் பறித்தப் பார்வை
திருப்பித் தந்தது
தீபஒளி
**************************************
35.உடைந்த சிற்பம்
உதிர்க்கும் சொற்கள்
வரலாறு
**************************************
36.உரக்கச் சொன்னச் சொல்
கரைந்து போனது
வாகன இரைச்சலில்
**************************************
37.சூரியன் மேற்பார்வையில்
வருணன் தரை இறங்கினான்
வெயில்மழை
**************************************
38.மழைத் தூறல் ஓய்ந்தது
வீட்டுக்கு கிளம்பு !
மாணவன் மகிழ்ச்சி !
வீட்டுக்கு கிளம்பு !
மாணவன் மகிழ்ச்சி !
**************************************
39.கை நிறைய பிஸ்கட்
நழுவி மண்ணிலும் விழுந்தது
பார்வை அக்காள் மேல்
நழுவி மண்ணிலும் விழுந்தது
பார்வை அக்காள் மேல்
**************************************
40.மாமரம் தந்தது இருப்பிடம்
பரணி பாடி வந்தனம்
குயில் குரலில்
பரணி பாடி வந்தனம்
குயில் குரலில்
No comments:
Post a Comment