Friday, 26 June 2015

ஹைக்கூ-2

ஹைக்கூ-2
23.பூச்சியை சிறைப் பிடித்து 
கூட்டில் விளக்கேற்றியது 
தூக்கணாங்குருவி

**************************************
24.ஒற்றைக் குயில் ஓசை 
காத்திருக்கும் செவி 
துணை ஓசைக்கு 

**************************************
25.காட்சிக்கு கிடைக்குமோ
தூரிகையில் சிக்குமோ
மாயமான வானவில் 
**************************************
26.இயற்கையை இறைஞ்சுவோம்
மனதில் காட்சி கொடு
கவிதை வேண்டும்

**************************************
27.கரடு முரடாய் உரைந்தது கல் 
சிக்கி முக்கியவன் வெளியே 
தீப் பொறியாய்

**************************************
28.இரவு பகலாய் உருளும் பந்து 
இயக்கத்தை துள்ளியமாய் இயம்பும் 
இரு முள்ளு

*************************************
29.அன்னை இல்லம் திரும்பி வரும் 
ஆரவார புது மனப்பெண் 
ஆடிக் காத்து

**************************************
30.குறையாகவே குடம் 
பிச்சை இடும் 
நிறையட்டும்

**************************************
31.நான் இருந்தேன் அவன் இல்லை 
நான் இல்லை இப்போது 
அவன் உண்டு

**************************************
32.விண்மீன் உண்டு பெருத்து 
உதயமான ஒளிப் பிழம்பு
ஆதவனோ !

************************************
33.அம்புலி வேண்டுகோள் விடுக்க
ஆதவன் மறைந்த பொழுது 
சந்தியானது

**************************************
34.இருள் பறித்தப் பார்வை 
திருப்பித் தந்தது 
தீபஒளி

**************************************
35.உடைந்த சிற்பம் 
உதிர்க்கும் சொற்கள் 
வரலாறு

**************************************
36.உரக்கச் சொன்னச் சொல் 
கரைந்து போனது 
வாகன இரைச்சலில்

**************************************
37.சூரியன் மேற்பார்வையில் 
வருணன் தரை இறங்கினான் 
வெயில்மழை
**************************************
38.மழைத் தூறல் ஓய்ந்தது 
வீட்டுக்கு கிளம்பு !
மாணவன் மகிழ்ச்சி !
**************************************
39.கை நிறைய பிஸ்கட் 
நழுவி மண்ணிலும் விழுந்தது 
பார்வை அக்காள் மேல்
**************************************
40.மாமரம் தந்தது இருப்பிடம் 
பரணி பாடி வந்தனம் 
குயில் குரலில்

No comments:

Post a Comment