ஆனையும் சிலந்தியும்
பக்திமோகம் கொண்ட சிவபக்தன் புட்பதத்தன்
அவன் மோகம் அறுத்து முக்தி தர இறைவன்
திரு உள்ளம் கொண்டார் கந்தர்வனையும்
சிவகணத்தில் ஒன்றான மாலியவானும் தத்தம்
சிவபக்தியே சிறந்தது என தர்க்கம் செய்தனர்
தர்க்கம் தீவிரம் பெற சினந்து சபித்தனர்
புட்பதத்தன் ஆனையாய் பிறப்பெடுக்க எதிர்
நின்ற மாலியவான் சிலந்தி ரூபம் கொணடது
புவி பிறப்பெடுத்த இருவரும் காவிரி வடகரையில்
வெண்ணாவல் சோலையில் வந்து சேர்ந்தனர்
சோலையில் சுயம்பாய் அவதரித்த லிங்கம்
புணல் பூஜித்த புண்ணியத் தலம் பிற்பாடு
ஆணை செய்த பூசையால் ஆனைக்கா எனப்
புது நாமம் சூட்டி நம் பக்திக்கதை நடந்தேறிய
சான்றாய் இன்றும் நிலைக்கும் திருவானைக்கா
வெண்ணாவல் மரங்கள் சூழ்ந்த சோலையில்
அமர்ந்து ஜம்புகேஸ்வரர் எனும் நாமம் தரித்த
எம்பெருமானார் வெயில் மழையில் நனைந்து
நாவல் இலைகளை அர்ச்சனையாய் ஏற்று
அகிலத்தை ஆனந்தமாய் காத்து வந்தார்
அவ்விடம் குடி கொண்ட சிலந்தி இறைவனார்
சிவகணம் ஆதலால் சிவசிந்தனை புரியும்
சிற்றறிவு பெற்று வந்தது தம் தலைவனார்
காய்ந்த சருகுகள் சிரமேற் நறுமலர் போல்
வீழ்வது கண்டு தன் மனத் துணுக்குற்றது
வீழும் சருகுகள் தம் இறையனாரை சூழா
வண்ணம் தன எச்சில் கொண்டு லிங்கத்
திருமேனிக்கு மேலே ஓர் பந்தர் வேய்ந்தது
பந்தர் தாண்டி பால் வண்ண மேனியார் மேல்
நாவல் சருகு வீழாதிருக்க மனம் மகிழ்ந்து
வெண்ணாவல் சோலையில் வாழும் வரம் பெற்ற
ஆனை பூர்வ ஜென்மப் பயனாய் காவிரி நீராடி
சோலையில் பூத்த மலர் கொய்து இறைவனார்
பாதம் சமர்ப்பித்து தம் பக்தி சொல்ல வந்தது
சிலந்த்ப் பந்தர் கண்ட ஆனை வருந்தியது
ஆலயம் எழுந்தருளி கருவறை குடிகொள்ளும்
எம் பெருமானார் இங்கு சிலந்தி பந்தரில் குந்தி
சிரமப் படுவாரே என மனம் வெம்பியது தன்
துதிக்கை கொண்டு அங்கிருந்த இழை சருகு
சிலந்தி பந்தரையும் அகற்றி தூய்மை செய்தது
காவிரி வரை சென்று தன துதிக்கையில் தண்ணீர்
நிரப்பி ஈஸ்வரரை அபிசேகித்து அழகிய மலர்
கொண்டு அர்ச்சித்து அகம் மகிழ்ந்தது மறுநாள்
வந்த சிலந்தி தன பந்தர் காணாமல் நொந்து
மீண்டும் தன் எச்சில் நூற் பந்தர் அமைத்தது
சிலந்தி பந்தரிட ஆனை அதை அழிக்க என
தொடர்ந்து வந்த தொடர்கதையாய் ஆனது
பொறுமையற்ற சிலந்தி ஓர்நாள்ஆனையுடன்
வலியவே வலுச்சண்டையில் இறங்கியது
எவ்விதமானும் பந்தர் காக்க எண்ணியது
மூர்த்தி சிறிய சிலந்தி ஆனையுடன் எங்கணம்
மல்லுக்கட்டும் தன்னையே ஆயுதமாக்கி
ஆனையின் மூச்சு துவாரத்தில் நுழைந்து
சிலந்தி நஞ்சினை சிந்தியது வலி பொறுக்கா
ஆனை துதிக்கையை தரையில் தட்டியது
சிலந்தியும் மாண்டு அதன் நஞ்சு பரவி
ஆனையும் அகால மரணம் அடைந்தது
ஆவி துறந்த அவர் முன்னே ஆதிநாயகன்
தோன்றி அவர் தம் பக்தி மெச்சி ஆனைக்கு
முக்தி சிலந்தியை சோழனாக பிறக்கவென
ஆணை பிறப்பித்து அருவமானார்
பக்திமோகம் கொண்ட சிவபக்தன் புட்பதத்தன்
அவன் மோகம் அறுத்து முக்தி தர இறைவன்
திரு உள்ளம் கொண்டார் கந்தர்வனையும்
சிவகணத்தில் ஒன்றான மாலியவானும் தத்தம்
சிவபக்தியே சிறந்தது என தர்க்கம் செய்தனர்
தர்க்கம் தீவிரம் பெற சினந்து சபித்தனர்
புட்பதத்தன் ஆனையாய் பிறப்பெடுக்க எதிர்
நின்ற மாலியவான் சிலந்தி ரூபம் கொணடது
புவி பிறப்பெடுத்த இருவரும் காவிரி வடகரையில்
வெண்ணாவல் சோலையில் வந்து சேர்ந்தனர்
சோலையில் சுயம்பாய் அவதரித்த லிங்கம்
புணல் பூஜித்த புண்ணியத் தலம் பிற்பாடு
ஆணை செய்த பூசையால் ஆனைக்கா எனப்
புது நாமம் சூட்டி நம் பக்திக்கதை நடந்தேறிய
சான்றாய் இன்றும் நிலைக்கும் திருவானைக்கா
வெண்ணாவல் மரங்கள் சூழ்ந்த சோலையில்
அமர்ந்து ஜம்புகேஸ்வரர் எனும் நாமம் தரித்த
எம்பெருமானார் வெயில் மழையில் நனைந்து
நாவல் இலைகளை அர்ச்சனையாய் ஏற்று
அகிலத்தை ஆனந்தமாய் காத்து வந்தார்
அவ்விடம் குடி கொண்ட சிலந்தி இறைவனார்
சிவகணம் ஆதலால் சிவசிந்தனை புரியும்
சிற்றறிவு பெற்று வந்தது தம் தலைவனார்
காய்ந்த சருகுகள் சிரமேற் நறுமலர் போல்
வீழ்வது கண்டு தன் மனத் துணுக்குற்றது
வீழும் சருகுகள் தம் இறையனாரை சூழா
வண்ணம் தன எச்சில் கொண்டு லிங்கத்
திருமேனிக்கு மேலே ஓர் பந்தர் வேய்ந்தது
பந்தர் தாண்டி பால் வண்ண மேனியார் மேல்
நாவல் சருகு வீழாதிருக்க மனம் மகிழ்ந்து
வெண்ணாவல் சோலையில் வாழும் வரம் பெற்ற
ஆனை பூர்வ ஜென்மப் பயனாய் காவிரி நீராடி
சோலையில் பூத்த மலர் கொய்து இறைவனார்
பாதம் சமர்ப்பித்து தம் பக்தி சொல்ல வந்தது
சிலந்த்ப் பந்தர் கண்ட ஆனை வருந்தியது
ஆலயம் எழுந்தருளி கருவறை குடிகொள்ளும்
எம் பெருமானார் இங்கு சிலந்தி பந்தரில் குந்தி
சிரமப் படுவாரே என மனம் வெம்பியது தன்
துதிக்கை கொண்டு அங்கிருந்த இழை சருகு
சிலந்தி பந்தரையும் அகற்றி தூய்மை செய்தது
காவிரி வரை சென்று தன துதிக்கையில் தண்ணீர்
நிரப்பி ஈஸ்வரரை அபிசேகித்து அழகிய மலர்
கொண்டு அர்ச்சித்து அகம் மகிழ்ந்தது மறுநாள்
வந்த சிலந்தி தன பந்தர் காணாமல் நொந்து
மீண்டும் தன் எச்சில் நூற் பந்தர் அமைத்தது
சிலந்தி பந்தரிட ஆனை அதை அழிக்க என
தொடர்ந்து வந்த தொடர்கதையாய் ஆனது
பொறுமையற்ற சிலந்தி ஓர்நாள்ஆனையுடன்
வலியவே வலுச்சண்டையில் இறங்கியது
எவ்விதமானும் பந்தர் காக்க எண்ணியது
மூர்த்தி சிறிய சிலந்தி ஆனையுடன் எங்கணம்
மல்லுக்கட்டும் தன்னையே ஆயுதமாக்கி
ஆனையின் மூச்சு துவாரத்தில் நுழைந்து
சிலந்தி நஞ்சினை சிந்தியது வலி பொறுக்கா
ஆனை துதிக்கையை தரையில் தட்டியது
சிலந்தியும் மாண்டு அதன் நஞ்சு பரவி
ஆனையும் அகால மரணம் அடைந்தது
ஆவி துறந்த அவர் முன்னே ஆதிநாயகன்
தோன்றி அவர் தம் பக்தி மெச்சி ஆனைக்கு
முக்தி சிலந்தியை சோழனாக பிறக்கவென
ஆணை பிறப்பித்து அருவமானார்
No comments:
Post a Comment