நான் மௌனமாய் இருக்கிறேன் பார்வைக்கு,
அப்போதுதான் அதிகமாய் பேசுகிறேன் என்னுடன்.
எதற்காய் பிறந்தோம் இவுலகில் என கேட்கிறேன்.
என்ன செய்து கொண்டிருக்கிறேன் என கேட்கிறேன்
எதை நோக்கி செல்கிறேன் வினா எழுப்புகிறேன்
ஆனாலும் நான் மௌனமாய் இருக்கிறேன் பார்வைக்கு.
எதற்காய் பிறந்தோம் இவுலகில் என கேட்கிறேன்.
என்ன செய்து கொண்டிருக்கிறேன் என கேட்கிறேன்
எதை நோக்கி செல்கிறேன் வினா எழுப்புகிறேன்
ஆனாலும் நான் மௌனமாய் இருக்கிறேன் பார்வைக்கு.
அடுத்து என்ன செய்ய என கேட்கிறேன்
எதையோ பெற முயல்வதை எண்ணுகிறேன்
எதை பெற எண்ணுகிறேன் என கேட்கிறேன்
பணமா,புகழா,பாசமா,பசிக்கு உணவா....
எல்லாம் இறைவன் தந்தானே என சொல்கிறேன்
ஆனாலும் நான் மௌனமாய் இருக்கிறேன் பார்வைக்கு.
எதையோ பெற முயல்வதை எண்ணுகிறேன்
எதை பெற எண்ணுகிறேன் என கேட்கிறேன்
பணமா,புகழா,பாசமா,பசிக்கு உணவா....
எல்லாம் இறைவன் தந்தானே என சொல்கிறேன்
ஆனாலும் நான் மௌனமாய் இருக்கிறேன் பார்வைக்கு.
சில நேரம் பிரிந்து சென்ற உறவுகளை நினைகிறேன்,
அவர்தம்மை நினைவினில் நிறுத்தி பொழுதை கழிக்கிறேன்
தந்தை தாயென கழிந்த பொழுது திரும்புமோ என ஏங்குகிறேன்
அதுவும் படைத்தவன் விதித்த விதிதான் என தேறுகிறேன்
ஆனாலும் நான் மௌனமாய் இருக்கிறேன் பார்வைக்கு.
அவர்தம்மை நினைவினில் நிறுத்தி பொழுதை கழிக்கிறேன்
தந்தை தாயென கழிந்த பொழுது திரும்புமோ என ஏங்குகிறேன்
அதுவும் படைத்தவன் விதித்த விதிதான் என தேறுகிறேன்
ஆனாலும் நான் மௌனமாய் இருக்கிறேன் பார்வைக்கு.
என்னை சுற்றி நடக்கும் இயல்புக்கு வருகிறேன்
இவரவர் செய்த செயல் எல்லாம் சரியோ யோசிக்கிறேன்,
சரி,தவறு,கோபம்,இயலாமை,இன்ன பெயர் பல கொண்டு
எல்லா செயல்களுக்கும் ஏதோ ஒரு பெயர் கொடுக்கிறேன்.
ஆனாலும் நான் மௌனமாய் இருக்கிறேன் பார்வைக்கு.
இவரவர் செய்த செயல் எல்லாம் சரியோ யோசிக்கிறேன்,
சரி,தவறு,கோபம்,இயலாமை,இன்ன பெயர் பல கொண்டு
எல்லா செயல்களுக்கும் ஏதோ ஒரு பெயர் கொடுக்கிறேன்.
ஆனாலும் நான் மௌனமாய் இருக்கிறேன் பார்வைக்கு.
என் குடும்பம்,என் பிள்ளைகள் எதிர்காலம் என யோசிக்க,
நடந்ததெல்லாம் உன் செயலோ,உன் எண்ணமோ என கேள்வி பிறக்க,
அவனின்றி அணுவும் அசையாது எனும்போது சிந்தை எதற்கு
சித்தத்தை சிவன் பால் வைத்து சிவனே!என்றிருக்க மனம் சொல்ல
நான் மௌனமாய் இருக்கின்றேன்.
நடந்ததெல்லாம் உன் செயலோ,உன் எண்ணமோ என கேள்வி பிறக்க,
அவனின்றி அணுவும் அசையாது எனும்போது சிந்தை எதற்கு
சித்தத்தை சிவன் பால் வைத்து சிவனே!என்றிருக்க மனம் சொல்ல
நான் மௌனமாய் இருக்கின்றேன்.

No comments:
Post a Comment