கந்தையானாலும் கசக்கி கட்டு.
சீவனானது சிவம் நினைக்கும் சட்டையை உடுத்தும்
சொக்கனுக்கே தெரியும் உயிரின் சொக்காய் எதுவென்று.
மகாதேவர் கண்டத்து ஆரமாம் அரவத்தை போலே உயிரும்
சட்டை உரித்து கழற்றி எரிந்து பிரயாணம் தொடர்கிறது
அடுத்து ஆன்மா உடுக்கும் உடை எதுவோ ஆடவல்லானே அறிவான்.
மலையான் மருகன் கொடுக்கும் கொடையை மறுக்கவும் இயலுமோ
சொக்கனுக்கே தெரியும் உயிரின் சொக்காய் எதுவென்று.
மகாதேவர் கண்டத்து ஆரமாம் அரவத்தை போலே உயிரும்
சட்டை உரித்து கழற்றி எரிந்து பிரயாணம் தொடர்கிறது
அடுத்து ஆன்மா உடுக்கும் உடை எதுவோ ஆடவல்லானே அறிவான்.
மலையான் மருகன் கொடுக்கும் கொடையை மறுக்கவும் இயலுமோ
ஒரு பிறப்பில் பட்டு சொக்காய் உயர்ந்த இடமாம் மன்னவனாய்,
மறு பிறப்பில் மினுக்கும் சொக்காய் உயர்குடி வியாபாரியாய்
அடுத்த பிறப்பில் செயற்கை இலை சொக்காய் ஊழியனாய்
அதற்கடுத்த பிறப்பில் பருத்தி இலை சொக்காய் சேவகனாய்
அதற்கடுத்த பிறப்பில் கந்தை சொக்காய் பரதேசியாய் என,
சொக்காய் பலவகை தந்து சொக்கன் நமை சோதிப்பான்.
மறு பிறப்பில் மினுக்கும் சொக்காய் உயர்குடி வியாபாரியாய்
அடுத்த பிறப்பில் செயற்கை இலை சொக்காய் ஊழியனாய்
அதற்கடுத்த பிறப்பில் பருத்தி இலை சொக்காய் சேவகனாய்
அதற்கடுத்த பிறப்பில் கந்தை சொக்காய் பரதேசியாய் என,
சொக்காய் பலவகை தந்து சொக்கன் நமை சோதிப்பான்.
பட்டு என்று பகட்டு இன்றி,மினுமினுப்பு கண்டு பிரமையின்றி
செயற்கை இலையில் உழன்று திரியாமல்,பருத்தி இலையானாலும்
பக்குவமாய் பயன்படுத்தி,கந்தையானாலும் கசக்கி கட்டி,
அகந்தை விட்டு,ஆணவம் அறுத்து, நான் என்பதை விடுத்து
உண்மை,அன்பு, மெய்ஞானம் ,மெயுனர்வு,இறையுணர்வு கொண்டு
இன்னுயிர் அதனை இயன்றவரை மேம்படுத்தி பயணம் தொடர்வோம்.
செயற்கை இலையில் உழன்று திரியாமல்,பருத்தி இலையானாலும்
பக்குவமாய் பயன்படுத்தி,கந்தையானாலும் கசக்கி கட்டி,
அகந்தை விட்டு,ஆணவம் அறுத்து, நான் என்பதை விடுத்து
உண்மை,அன்பு, மெய்ஞானம் ,மெயுனர்வு,இறையுணர்வு கொண்டு
இன்னுயிர் அதனை இயன்றவரை மேம்படுத்தி பயணம் தொடர்வோம்.

No comments:
Post a Comment