Monday, 25 May 2015

பதியும் பசுவும்

பதியெனும் சொல்லுகுரியவன் இறைவன் 
பசுவெனும் சொல்லுக்குரியவை உயிர்கள்
முன்னவனுக்கும்,பின்னவைக்கும் ஒற்றுமை பல.
ஆதியும் அந்தமும் இல்லாதவர்கள்.
என்றும் நிலைத்தவர்கள்.
ஆம் ஆனால் மும்மலம் அற்றவன் முன்னவன்.
முமலமும் உற்றவை பின்னவை.
இருபினும் இருந்தது சில ஒற்றுமை.
ஆம் அருவமாய் எங்கும் நிறைந்தவன் ஈசன்.
ஸ்தூல உடல் துறக்கும் காலம் சூட்சமமாய் இருப்பன உயிர்கள்.
அரு உருவாய் லிங்க மேனியாய் அமைந்தவன் அப்பன்.
ஈர் ஐந்து திங்கள் மட்டும் கரு உருவில் நிற்பவை உயிர்கள்.
எல்லாம் வல்ல சித்தனாய்,பொன்னம்பலம் ஆடும் ஐயனாய்
நடராஜ மூர்த்தியாய் நடனம் காட்டியவன் உருவமாய்.
ஐம்புலன் கொண்டதாய் பஞ்சபூத சேர்க்கையில் ஆண்,பெண்
என்று பல வித வண்ணம் கொண்டு உருவம் கொண்டன உயிர்கள்.
பதி பசுவை உய்விக்க வல்லது ,முக்தி தர உதவுவது.
பசு பதியை பற்றியது,முக்தி பெற முனைகிறது.
பதி,உயிருடன் உயிராய் இருந்து இயக்குவது.
பசு,தம்முடன் இருக்கும் பதியை அறியாமல் தவிக்கிறது.
கண்ணுக்கு பொருட்களை காட்டவல்லது சூரியன்
அது போலே பதியாகியது,பசுவுக்கு அனைத்தையும் காட்டுவது.
இயற்கையில் ஞானம் நிறைந்தது பதி,
அது அறிவித்தால் அறிவது பசு.
இதுபோல் இன்னும் உண்டு ஆயிரமாயிரம் பந்தம்
பதிக்கும்,பசுவுக்கும்.அதை உணர்ந்தாலே உண்டு முக்தி.

No comments:

Post a Comment