எம்டன் மகள் எழுதும் உரை,
மண்ணில் வந்து பிறந்தோம் நற் பெற்றோருக்கு மகளாய்,
வித்தாய் மடியில் வீழ்ந்த எமை முத்தாய் பிறப்பித்த எம்
தாய் தந்தையர்க்கு என்றென்றும் அன்புடன் ஓர் அஞ்சலி
வித்தாய் மடியில் வீழ்ந்த எமை முத்தாய் பிறப்பித்த எம்
தாய் தந்தையர்க்கு என்றென்றும் அன்புடன் ஓர் அஞ்சலி
ஆசையுடன் பெற்றெடுத்து அன்புடன் வளர்த்து விட்டு
ஆதிசிவன் வளர்திடுவான் என்று வானம் நோக்கி சென்றீரோ
வாழ்ந்த வாழ்க்கை போதுமென்று வந்த கடன் தீர்ந்ததென்று தம்
பிள்ளைகளை சமயபுரத்தாள் வாழ வைப்பாள் என்று நினைத்தீரோ
ஆதிசிவன் வளர்திடுவான் என்று வானம் நோக்கி சென்றீரோ
வாழ்ந்த வாழ்க்கை போதுமென்று வந்த கடன் தீர்ந்ததென்று தம்
பிள்ளைகளை சமயபுரத்தாள் வாழ வைப்பாள் என்று நினைத்தீரோ
அன்னையவள் நெய் உருக்கி அமுதம் படைக்க,அதனை பக்குவமாய்
பிசைந்து பகிர்ந்தளித்த அப்பாவின் பிடி சோறு இன்றும் நாவில் சுவைதருதே.
அம்மா சுட்டு தந்த தோசைகளை வாங்கி வைக்க பொறுமையின்றி போதுமா
போதுமா என கேட்ட சிறுபிள்ளை இன்று போதுமென்று நீர் சொல்லும் வரை
வார்த்து தர காத்திருந்தாலும் வரமாய் கூடஅந்த சுகம் பெற இயலாதே.
பிசைந்து பகிர்ந்தளித்த அப்பாவின் பிடி சோறு இன்றும் நாவில் சுவைதருதே.
அம்மா சுட்டு தந்த தோசைகளை வாங்கி வைக்க பொறுமையின்றி போதுமா
போதுமா என கேட்ட சிறுபிள்ளை இன்று போதுமென்று நீர் சொல்லும் வரை
வார்த்து தர காத்திருந்தாலும் வரமாய் கூடஅந்த சுகம் பெற இயலாதே.
தீபவொளி திருநாளில் புது உடை போட்டுவிட்டு ,வெடி வெடிக்க திரி கிள்ளி தந்து,
பட்சணங்கள் தந்தவரே,வான வெடி வெடிக்க சென்ற என் விரல்கள் எல்லாம்
வெந்துவிட அதற்க்கு மருந்திட்டு உம் வாயினால் பொழுதெல்லாம் ஊதிவிட்ட
அந்த புகை கலந்த நெடி என்றென்றும் எம் நினைவில் நிறைக்குதையா.
பட்சணங்கள் தந்தவரே,வான வெடி வெடிக்க சென்ற என் விரல்கள் எல்லாம்
வெந்துவிட அதற்க்கு மருந்திட்டு உம் வாயினால் பொழுதெல்லாம் ஊதிவிட்ட
அந்த புகை கலந்த நெடி என்றென்றும் எம் நினைவில் நிறைக்குதையா.
நான் பூப்புனித நீராடி தாவணி போட்ட நாளை நீர் பார்க்கவில்லை,
மணமாலை நான் சூடி மணவாளன் கரம் பிடித்ததை காணவில்லை,
முன் வயிறு தள்ளி உம் பெயரன்,பேத்தி சுமந்ததையும் நோக்கவில்லை,
பிரசவ வலி கண்டு என் மகவுகளை பெற்றெடுத்த நேரமும் அருகில் இல்லை.
மணமாலை நான் சூடி மணவாளன் கரம் பிடித்ததை காணவில்லை,
முன் வயிறு தள்ளி உம் பெயரன்,பேத்தி சுமந்ததையும் நோக்கவில்லை,
பிரசவ வலி கண்டு என் மகவுகளை பெற்றெடுத்த நேரமும் அருகில் இல்லை.
ஊரார் பிள்ளைஎல்லாம் உம் சிரம் மேலே கரம் கோதிவிளையாட விட்டவரே,
எம் பிள்ளைகள் விளையாட தொப்பையையும்,மடியையும் தாராமல் எங்கே
மறைத்து எடுத்து சென்றீரோ? உமக்கு காலில் நோவு வந்தால் மிதிக்க உம்
உடல் எல்லாம் நடமாட பெயரன்,பேத்தியர் ஐவர் உண்டு இப்போது.வருவீரோ?
எம் பிள்ளைகள் விளையாட தொப்பையையும்,மடியையும் தாராமல் எங்கே
மறைத்து எடுத்து சென்றீரோ? உமக்கு காலில் நோவு வந்தால் மிதிக்க உம்
உடல் எல்லாம் நடமாட பெயரன்,பேத்தியர் ஐவர் உண்டு இப்போது.வருவீரோ?
எல்லாம் வல்லவன் இறைவன் என்றால் ,எமக்கு நீர் தானே இறைவனை இருந்தீர்
அந்த நம்பிக்கையை சிறுபிராயத்திலே உடைத்து எம் வயிறெல்லாம் கலக்க வைத்தவரே
இருபத்தும் ஓர் நான்கும் கடந்து வருடங்கள் ஆனாலும் இன்னும் அந்நாளே கரிநாள்.
அந்த நம்பிக்கையை சிறுபிராயத்திலே உடைத்து எம் வயிறெல்லாம் கலக்க வைத்தவரே
இருபத்தும் ஓர் நான்கும் கடந்து வருடங்கள் ஆனாலும் இன்னும் அந்நாளே கரிநாள்.
பள்ளி செல்லும் பொது கால்மேல் காலிட்டு காசுதந்து விட்டு ,திரும்பி வருகையிலே
பக்குவமாய் பாரதியார் புத்தகம் படிக்கும் பாவனையில் மூலையில் அமர்ந்திருந்தீரே
பக்குவமாய் பாரதியார் புத்தகம் படிக்கும் பாவனையில் மூலையில் அமர்ந்திருந்தீரே
எவரிடமும் அஞ்சாத,எல்லா திறமைகளும் கொண்டு எம் தாத்தனிடம் எம்டன்
என்று பெயர் பெற்றவரே ,எமனை ஏமாற்றும் கலை மட்டும் என்ன கற்கவில்லை?
அதுவும் எமன் செய்த சதியாக இருக்கும்,முன்னே சென்ற என் பெரிய அன்னையின்
சுலோச்னமானா முகம் காட்டி,உமை பாசக் கயிற்றால் இழுத்திருப்பான் சதிகாரன்.
அதுவும் எமன் செய்த சதியாக இருக்கும்,முன்னே சென்ற என் பெரிய அன்னையின்
சுலோச்னமானா முகம் காட்டி,உமை பாசக் கயிற்றால் இழுத்திருப்பான் சதிகாரன்.
அங்கே உமக்காக ஓர் நங்கை காத்திருக்க,இங்கொரு நங்கையை விட்டு சென்றவரே
அவள் ஒருத்தி உமக்கு போதாதோ ஈன் இன்னொருவளையும் அழைத்து கொண்டீர்.
வள்ளி தெய்வானையுடன் நீர் பாலசுப்ரமனியனாய் நீர் வீற்றிருக்க ஆசை கொண்டாயோ
போகட்டும்,தந்தையாய் ஓர் தமையனை தந்துவிட்டு அகன்றுகொண்டீர் என இருக்க
அவள் ஒருத்தி உமக்கு போதாதோ ஈன் இன்னொருவளையும் அழைத்து கொண்டீர்.
வள்ளி தெய்வானையுடன் நீர் பாலசுப்ரமனியனாய் நீர் வீற்றிருக்க ஆசை கொண்டாயோ
போகட்டும்,தந்தையாய் ஓர் தமையனை தந்துவிட்டு அகன்றுகொண்டீர் என இருக்க
அவனையும் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டவிட்ட ஈசனிடம் வம்பு செய்வீர் மறவாமல்
பட்டி விட்டு வழிமாறி சென்ற மேய்ப்பார் இல்லாத ஆடுகளை மேய்த்து கொண்டு வந்து
பட்டியில் அடைத்து ஒரே தொட்டியில் தண்ணீர் அருந்த வைப்பதுவும் உன் கடனே
மேலுலகம் சென்றாலும் நம்மிடையே இடைவெளி இல்லை என்றும் நீர் எமுடனே
பட்டி விட்டு வழிமாறி சென்ற மேய்ப்பார் இல்லாத ஆடுகளை மேய்த்து கொண்டு வந்து
பட்டியில் அடைத்து ஒரே தொட்டியில் தண்ணீர் அருந்த வைப்பதுவும் உன் கடனே
மேலுலகம் சென்றாலும் நம்மிடையே இடைவெளி இல்லை என்றும் நீர் எமுடனே
பரமனிடம் பக்குவமாய் எடுத்து கூறும்,அவன் பத்தினியிடம் அழுது முறையிடும்
உன் உற்றாரும்,சுற்றாரும் என்றும் சுகமாய் வாழவேண்டும் என்றும் நம் கொடுமை
இனி ஒருவரும் அனுபவிக்க வேண்டாம் என்றும் தம்பதியராய் சென்று வரம் கேளும்.
இப்படிக்கு
எம்டன் மகள்.
உன் உற்றாரும்,சுற்றாரும் என்றும் சுகமாய் வாழவேண்டும் என்றும் நம் கொடுமை
இனி ஒருவரும் அனுபவிக்க வேண்டாம் என்றும் தம்பதியராய் சென்று வரம் கேளும்.
இப்படிக்கு
எம்டன் மகள்.

No comments:
Post a Comment