Monday, 25 May 2015

அண்டமும் பிண்டமும்.


ஆயிரம் சத்தியம் சொல்லும் சைவத்துள்ளிருந்து,
ஒரு துளி சிந்தபடுகிறது இங்கே சிந்திக்க!
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது!
என்பது சித்தாந்த வாக்கு.
அண்டத்திற்கு தந்தான் ஆண்டவன் ஐம்பூதத்தின்
சேர்க்கையால் ஓர் உருவை
அதை பிண்டத்திலும் வைத்தான் இறைவன்
ஆன்மா உட்புக ஓர் உடலாய்.
நிலம் எனும் திடப் பொருள் தத்துவம்
இதில் இறைவன் ஐந்தாய் பரந்திட்டான்.
அண்டத்தில் மண்,மலை,கல் எனவும்,
பிண்டத்தில் சதை,எலும்பு,நரம்பு,தோல் எனவும்,
ஒருங்கே நேர்த்தியாய் இருந்திட்டான்.
நீர் எனும் திரவப்பொருள் தத்துவம்
இதில் நாயகன் நான்காய் நிகழ்ந்திட்டான்.
அண்டப்பொருளில் நீர் நிலையென நிறுத்திட்டான்.
பிண்டப்பொருளில் கபம் எனும் ஐவகை நீராய் நிறைந்திட்டான்.
(ஐவகை நீர்-ரத்தம்,உமிழ்நீர்,சிறுநீர்,சளி,இனப்பெருக்க நீர்)
தீ எனும் சூடு தரும் தத்துவம்
இதில் தீஞ்சுடர் சோதி மூன்றாய் திகழ்ந்திட்டான்.
அண்டத்தில் அக்னியை ,ஒளியாய் அமைந்திட்டான்.
பிண்டத்தில் பித்தம் எனும் ஐவகை சூடாய் இருந்திட்டான்.
(இருதயம்,செரிமம்,கண்களின் ஒளி முதலான ஐவகை உண்டு.)
வளி எனும் வாயுப்பொருளில் இரண்டாய் மகிழ்ந்திட்டான்.
அண்டப்பொருளில் அடுக்கடுக்காய் காற்றாய் பரவி நின்றான்,
பிண்டப்பொருளில் வாதம் எனும் பத்து வகையாய் பரவிட்டான்.
(நாம் உணரும் மூச்சு முதல் பத்துவகை வாதம் உண்டு)
வெளி எனும் வெற்றிடத்தில் ஒன்றாய் விளைந்திட்டான்.
அண்டத்தில் பால்வெளி வீதி என பக்குவமாய் அமைத்திட்டான்.
பிண்டத்தில் கபமும்,வாதமும் பயணப்பட வெற்றிடம் ஒன்றை
அமைதிட்டான்,
அண்டத்தில் உள்ள அனைத்தையும் பிண்டத்தில் வைத்த இறைவன்.
அண்டத்தையும்,பிண்டத்தையும் ஆன்மா அனுபவிக்க படைத்திட்டான்.
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி!
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி!
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி!
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!
-போற்றித் திருஅகவல் ,திருவாசகம்.

No comments:

Post a Comment