ஆதி கடவுள் கையில் ஆராவமுதன்.
நீல வண்ணனை தாங்கி நிற்கும் நீலகண்டன்.
அலைமகள் நாயகனை அள்ளி நிற்கும் மலைமகள் நாயகன்.
கண்ணனுக்கு வலிக்குமோ என்று பிடித்தபடி கயிலை வாசன்,
ஆனந்தமாய் அவர் மடியில் அமர்ந்தபடி பாற்கடல் வாசன்.
நாகத்தை கிரிடமாய் கொண்ட இமய வாசன்
மயில் பீலி மகுடம் கொண்ட பிருந்தாவன ராஜன்
உடுக்கை இசை முழங்கும் அகிலம் அசையும்.
குழல் ஊதி இசைக்க அகிலம் மயங்கும்
ருத்திராட்சம் அணிந்த மகாதேவன்
முத்து மணி மாலை அணிந்த முகுந்தன்
திரிசூலம் தாங்கி நிற்கும் திரிபுராந்தகன்
சங்கு சக்கரம் ஏந்தி நிற்கும் பாண்டுரங்கன்
செம்பவள மேனி கொண்ட சொக்கநாதன்
கரிய திருமேனி கொண்ட கண்ணன்
புலி ஆடை அணிந்து வரும் பண்டாரன்
மஞ்சள் ஆடை அணிந்து நிற்கும் மாதவன்
பன்னிரு திருமுறை புகழ் பாடிடும் சதாசிவனை
நாலாயிர திவ்ய ப்ரபந்தம் இசைபாடும் பெருமாளை
சாம்பல் அணிந்த திருமேனி மகேஸ்வரனது
சந்தனம் மணக்கும் திருமேனி கோவிந்தனது
சௌந்தர்யம் குடி கொண்ட அருள் முகம்
இரண்டினையும் காணக் கண் கோடி வேண்டும்
தமிழின் மொழி போதவில்லை இதனை வர்ணிக்க.
கண்ணீர் பெருகுகிறது இதை நோக்கையிலே
நீல வண்ணனை தாங்கி நிற்கும் நீலகண்டன்.
அலைமகள் நாயகனை அள்ளி நிற்கும் மலைமகள் நாயகன்.
கண்ணனுக்கு வலிக்குமோ என்று பிடித்தபடி கயிலை வாசன்,
ஆனந்தமாய் அவர் மடியில் அமர்ந்தபடி பாற்கடல் வாசன்.
நாகத்தை கிரிடமாய் கொண்ட இமய வாசன்
மயில் பீலி மகுடம் கொண்ட பிருந்தாவன ராஜன்
உடுக்கை இசை முழங்கும் அகிலம் அசையும்.
குழல் ஊதி இசைக்க அகிலம் மயங்கும்
ருத்திராட்சம் அணிந்த மகாதேவன்
முத்து மணி மாலை அணிந்த முகுந்தன்
திரிசூலம் தாங்கி நிற்கும் திரிபுராந்தகன்
சங்கு சக்கரம் ஏந்தி நிற்கும் பாண்டுரங்கன்
செம்பவள மேனி கொண்ட சொக்கநாதன்
கரிய திருமேனி கொண்ட கண்ணன்
புலி ஆடை அணிந்து வரும் பண்டாரன்
மஞ்சள் ஆடை அணிந்து நிற்கும் மாதவன்
பன்னிரு திருமுறை புகழ் பாடிடும் சதாசிவனை
நாலாயிர திவ்ய ப்ரபந்தம் இசைபாடும் பெருமாளை
சாம்பல் அணிந்த திருமேனி மகேஸ்வரனது
சந்தனம் மணக்கும் திருமேனி கோவிந்தனது
சௌந்தர்யம் குடி கொண்ட அருள் முகம்
இரண்டினையும் காணக் கண் கோடி வேண்டும்
தமிழின் மொழி போதவில்லை இதனை வர்ணிக்க.
கண்ணீர் பெருகுகிறது இதை நோக்கையிலே

No comments:
Post a Comment