பழகிகொள்ள கொள்ளை ஆசை.
சின்ன,சின்ன ஆசை ஒவ்வருவருக்கும் உண்டு.
சிறகடித்து பறக்கும் ஆசையும் உண்டு.
சக்திக்கு சிம்மம்,
சிவத்திற்கு காளை
முருகனுக்கு மயில்.
முன்னவருக்கு மூஞ்சுறு,
மாயவனாம் மாமனுக்கு கருடன்
கருப்பனுக்கு குதிரை
பைரவருக்கு நாய்
என தெய்வங்களுக்கு வாகனம் தந்தோம்.
அவனும் தந்தான் மானிடர்க்கு வாகனம்.
ஒன்று,இரண்டு,மூன்று ,நான்கு,ஆறு என
சக்கரத்தின் எண்ணிக்கை மாற்றி
இயல்புக்கு ஏற்ப எடுத்துகொள் மானிடா என்று
ஆனால் அதை பழகிக்கொள்ள ஆசை மட்டுமே உண்டு எனக்கு!
அவரவர் வாகனமே அவர் ப்ரிய பிராணியாய் மாறின.
அனைத்து ஜீவராசியிடமும் அன்பை கொண்டாட
எல்லாம் ஒன்றே என்று மானிடர் உணர்ந்திட
தெய்வங்கள் அணைத்து உயிரிடமும் அன்பை பொழிந்தன.
மானிடர்,மனிதத்துவம் மறந்தனர் ஆயினும்,
செல்ல பிராணி வளர்க்க தவறவில்லை.
எதனிடமாவது அன்பை செலுத்த தெரிந்ததே
இவ்விதமாவது வளரட்டும் அன்பு என்று நானும்
பைரவர் வாகனத்தின் அருகில் செல்ல எண்ணமிட்டேன்
ஆனால் அதை பழகிக்கொள்ள ஆசை மட்டுமே உண்டு எனக்கு!
இவ்விதமாய் பழகிக்கொள்ள ஆசைகள் கொண்டது இரண்டு
ஆனால் தெனாலியை விடவும் அதிக பயம் கொண்டது மனது.
பள்ளிச்சிறுமி ஒருத்தி வளர்ப்பு நாயுடன் ஒருநாள்
மிதிவண்டி மிதித்து செல்வதை கண்டபோது ஏக்கம் பிறந்தது,
பயமும் பற்றியது.பற்றற்ற வாழ்வினை பற்றி பல,பல
எண்ணங்கள் உதிர்க்கும் மனமே எங்கே போனது உன்
துணிச்சலும் தைரியமும்,எதை தொலைக்கும் பயம் உனக்கு
என எச்சி காரி உமிழ்ந்து என் மனதை ஏசி நின்றேன் நான்.
அந்த நாளும் வந்திடாதோ?
கீழ் வீட்டு டோனியுடன் விளையாடி,
ஸ்கூட்டி ஒட்டி மகிந்தாடும் அந்த நாளும் வந்திடாதோ?
பழகிகொள்ள கொள்ளை ஆசைஎனக்கு!
சிறகடித்து பறக்கும் ஆசையும் உண்டு.
சக்திக்கு சிம்மம்,
சிவத்திற்கு காளை
முருகனுக்கு மயில்.
முன்னவருக்கு மூஞ்சுறு,
மாயவனாம் மாமனுக்கு கருடன்
கருப்பனுக்கு குதிரை
பைரவருக்கு நாய்
என தெய்வங்களுக்கு வாகனம் தந்தோம்.
அவனும் தந்தான் மானிடர்க்கு வாகனம்.
ஒன்று,இரண்டு,மூன்று ,நான்கு,ஆறு என
சக்கரத்தின் எண்ணிக்கை மாற்றி
இயல்புக்கு ஏற்ப எடுத்துகொள் மானிடா என்று
ஆனால் அதை பழகிக்கொள்ள ஆசை மட்டுமே உண்டு எனக்கு!
அவரவர் வாகனமே அவர் ப்ரிய பிராணியாய் மாறின.
அனைத்து ஜீவராசியிடமும் அன்பை கொண்டாட
எல்லாம் ஒன்றே என்று மானிடர் உணர்ந்திட
தெய்வங்கள் அணைத்து உயிரிடமும் அன்பை பொழிந்தன.
மானிடர்,மனிதத்துவம் மறந்தனர் ஆயினும்,
செல்ல பிராணி வளர்க்க தவறவில்லை.
எதனிடமாவது அன்பை செலுத்த தெரிந்ததே
இவ்விதமாவது வளரட்டும் அன்பு என்று நானும்
பைரவர் வாகனத்தின் அருகில் செல்ல எண்ணமிட்டேன்
ஆனால் அதை பழகிக்கொள்ள ஆசை மட்டுமே உண்டு எனக்கு!
இவ்விதமாய் பழகிக்கொள்ள ஆசைகள் கொண்டது இரண்டு
ஆனால் தெனாலியை விடவும் அதிக பயம் கொண்டது மனது.
பள்ளிச்சிறுமி ஒருத்தி வளர்ப்பு நாயுடன் ஒருநாள்
மிதிவண்டி மிதித்து செல்வதை கண்டபோது ஏக்கம் பிறந்தது,
பயமும் பற்றியது.பற்றற்ற வாழ்வினை பற்றி பல,பல
எண்ணங்கள் உதிர்க்கும் மனமே எங்கே போனது உன்
துணிச்சலும் தைரியமும்,எதை தொலைக்கும் பயம் உனக்கு
என எச்சி காரி உமிழ்ந்து என் மனதை ஏசி நின்றேன் நான்.
அந்த நாளும் வந்திடாதோ?
கீழ் வீட்டு டோனியுடன் விளையாடி,
ஸ்கூட்டி ஒட்டி மகிந்தாடும் அந்த நாளும் வந்திடாதோ?
பழகிகொள்ள கொள்ளை ஆசைஎனக்கு!

No comments:
Post a Comment